Posts

Showing posts from May, 2024

உங்கள் பிள்ளைகள் எப்படி?

  உங்கள் பிள்ளைகள் எப்படி? பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம் என்று சங்கீதம் 127:3ல் வாசிக்கிறோம். கர்த்தர் கொடுத்திருக்கிற பிள்ளைகளை கர்த்தருக்குப் பிரியமாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. முதலாவது, கர்த்தருடைய வசனத்தை பிள்ளைகளுக்கு கருத்தாய் போதிக்க வேண்டும். உபாகமம் 6:7ல் கர்த்தர் இஸ்ரவேல் புத்திரர்களிடத்தில், நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கும் போதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்கிறபோதும், எழுந்திருக்கும்போதும், அவைகளைக்குறித்துப் பேச வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எனது திருச்சபையின் ஞாயிறு பள்ளியில் 200க்கும் அதிகமான பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் இன்று அதில் நான்கில் ஒரு பங்கு பிள்ளைகள் கூட ஞாயிறு பள்ளிக்கு ஒழுங்காக வருகிறதில்லை. இது எனது திருச்சபையின் ஞாயிறு பள்ளியில் மட்டுமல்ல, பெரும்பாலான ஞாயிறு பள்ளிகளில் நிலமை இதுதான். இன்றைக்கு நாட்டில் சிறு பிள்ளைகளின் எண்ணிக்கை திடீரென்று குறைந்து விட்டதா? இல்லவே இல்லை. பெற்றோர்கள், பிள்ளைகள் ஒழுங்காக ஞாயிறு பள்ளிக்கு செல்வதைக்குற...

கடவுள் இருக்கிறாரா?

  கடவுள் இருக்கிறாரா? இரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவரில் ஒருவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர், மற்றொருவர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் (நாத்தீகர்). கடவுள் நம்பிக்கை இல்லாதவர் தன்னுடைய நண்பனிடம் சொன்னார், கிறிஸ்தவர்கள் கொண்டாடுவதற்கென்று கிறிஸ்மஸ், ஈஸ்டர், புத்தாண்டு போன்ற பல சிறப்பு தினங்கள் உண்டு. மற்ற மதத்தினர்களுக்கும் அவர்களுக்கென்று பல சிறப்பு தினங்கள் உண்டு. ஆனால் என்னைப்போன்ற நாத்தீகனுக்கென்று எந்தவித சிறப்பு தினங்களும் இல்லை. இதைக்கேட்ட அவனது நண்பன் சொன்னான், ஏன் இல்லை? உன்னுடைய தினத்தை தான் உலகமே சிறப்பாகக் கொண்டாடுகிறது! ஏப்ரல் 1, முட்டாள்கள் தினத்தைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்றான். தேவன் இல்லை என்று மதிகேடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்கிறான் என்று வேதபுத்தகத்தை எழுதி கொடுத்திருக்கும் கடவுளும் சொல்கிறார். கடவுள் இருக்கிறார் என்பதற்கான மிக முக்கியமான அடையாளம் அவருடைய படைப்புகளே! தேவனே இந்த உலகத்தையும் அதில் உள்ள எல்லா வற்றையும் மிக நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். இந்த உண்மையை ஏற்று கொள்ள மறுக்கும் மனிதனின் பெருமையுள்ள இருதயமானது, உலகம் பரிணாமத்தின் (Evolut...

லோத் கேரக்டர் பைபிள் படிப்பு - பின்னணி மற்றும் ஆதியாகமம் 19ல் இருந்து பாடங்கள்

Image
  லாட் கேரக்டர் பைபிள் படிப்பு - பின்னணி மற்றும் ஆதியாகமம் 19ல் இருந்து பாடங்கள் படிக்க பரிந்துரைக்கப்பட்ட பகுதிகள்  : ஆதியாகமம் 11:27-31, 12:4-5, 13:1-14, 19, 2 பேதுரு 2:7-8 பெயர்  : நிறைய பெயரின் பொருள்  : மூடுதல், முக்காடு பரம்பரை மற்றும் குடும்ப வாழ்க்கை  : லோத் ஒரு செமிட். தேரா ஆபிராம், நாகோர் மற்றும் ஆரானின் தந்தை. ஆரான் லோத்தின் தந்தை. லோத்து   ஆபிராமின் மருமகன் மற்றும் ஈசாக்கின் உறவினர்  . அவர் எப்போது, ​​எங்கு வாழ்ந்தார்: லோத் மெசபடோமியாவில் வாழ்ந்தார். இது இன்றைய சிரியா, ஈராக் மற்றும் துருக்கியின் நிலம். தேராவின் குடும்பம் “கல்தேயர்களின் ஊர்” வை விட்டு வெளியேறியது என்று பைபிள் வாசகம் (ஆதியாகமம் 11:31) கூறுகிறது என்பதைக் கவனியுங்கள். கல்தேயர்கள் ஒரு மக்கள் குழுவாக இருந்தனர், அவர்கள் இறுதியில் பாபிலோனிய பேரரசை நிறுவினர். தெற்கு ஈராக்கில் உள்ள ஊர் என்பது நவீன கால டெல் எல்-முகய்யர் என்பதற்கான சான்றுகள் உள்ளன. அடுத்து தேராவின் குடும்பம் பாலைவனத்தைத் தாண்டி வடமேற்கே சிரியா மற்றும் துருக்கி எல்லைக்கு வடக்கே உள்ள ஹாரானுக்குச் சென்றது. அங்கே...